Ads

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த பேரவை விதி 110 - ன்கீழ் தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை !

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த பேரவை விதி 110 - ன்கீழ் தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை ! 

 அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110 - ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது அறிக்கை மாண்புமிகு போவைத் தலைவர் அவர்களே , அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக , அவர்களுக்கு உரிமைகளையும் , சலுகைகளையும் வழங்கும் தோழனாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது . போறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்து செயல்படுத்திய , அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள் எண்ணற்றவை ; இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை . அந்த வகையில் , அண்மையில் , பல்வேறு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களைச் சார்ந்த சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளையெல்லாம் பரிசீலித்து , பின்வரும் முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன் . 


அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு :

( 1 ) என அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து , நிதிநிலை அறிக்கையில் 1-4-2022 முதல் அமல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது . இதுகுறித்து வரப்பெற்ற அரசு வாழியர்கள் சங்கங்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்து , இந்த அரசுக்குக் கடும் நெருக்கடியான நிதிச் சூழல் இருப்பினும் , அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு , அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத 2 காலத்திற்கு முன்னதாகவே , அதாவது , 1-1-2022 முதல் , அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் , மேசையைத் தட்டும் ஒலி ) இதன்மூலம் 15 இலட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் . இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே , அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால் , மூன்று மாத காலத்திற்குக் கூடுதலாக ஆயிரத்து 620 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் . ஆண்டொன்றுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவாகும் . 

ஓய்வுபெறும் வயது 58 - லிருந்து 60 - ஆக உயர்வு :

( 2 ) சத்துணவு மையங்களில் பணி புரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 - லிருந்து 60 - ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும் , 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள் , 

உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை :

( 3 ) அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்டது . அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின்மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு , உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை , ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் . 


அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் :

( 4 ) அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை . உதவியாளர் பணியிடங்கள் , தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , ( போசையைத் தட்டும் ஒலி )

( 5 ) ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் . ( மேசையைத் தட்டும் ஒலி ) 

வேலைநிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக் காலமாக முறைப்படுத்தப்படும் :

( 6 ) 2016 , 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக , பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தினைப் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள் , இதனைப் பரிவுடன் பரிசீலித்து , பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் ஆகியவை பணிக் காலமாக முறைப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் . மேசையைத் தட்டும் ஒலி 

( 7 ) வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை , அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் , ( மேசையைத் தட்டும் ஒலி கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும் . மேலும் , போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் . ( மேசையைத் தட்டும் ஒலி ) அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் , அவையும் சரிசெய்யப்படும் . 

கருணை அடிப்படையிலான நியமனங்கள் :

( 8 ) பணியில் இருக்கும்போது காலமான அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கும் வகையிலும் , கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையினைச் சரிசெய்யும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் . மேசையைத் தட்டும் ஒலி ) 

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் :

( 9 ) அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும் . ( மேசையைத் தட்டும் ஒலி ) மேலும் , அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக , அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்தத் தனி தொலைபேசி உதவி மையம் ( Help Desk ) ஒன்று அமைக்கப்படும் .

( 10 ) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர்சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் , அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயைவிடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும் . மேசையைத் தட்டும் ஒலி 

( 11 ) கணக்கு மற்றும் கரூவூலத் துறையின் ( IFHRMS ) பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு , அவற்றைத் துரிதமாகவும் , எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய வகையில் , மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் . 

( 12 ) புதியதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு , பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் . இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு , தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும் . 

( 13 ) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப , ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் . ( மேசையைத் தட்டும் ஒலி ) மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் , அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்து அமைகிறேன் .