Ads

24.09.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

24.09.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  

 விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  24.09.2021 விழுப்புரம் மாவட்டம் - பள்ளிக் கல்வித் துறை - உள்ளாட்சி தேர்தல் 2021- தேர்தல் வாக்குசாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் சார்ந்த பயிற்சி வகுப்புகள் அன்று நடைபெறவிருப்பதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தல் - சார்பு , 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி நாள் . 22.09.2021 - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2021 பணிகள் சார்ந்த முதல் பயிற்சி வகுப்பு 24.09.2021 அன்று நடைபெறவிருப்பதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் , மாவட்ட ஆட்சியரின் அனுமதி ஆணையின்படி 24.09.2021 அன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது . எனவே , தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தவறாமல் தேர்தல் பணி சார்ந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

 தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாட்களில் அரசு / அரசு நிதியுதவி பெறும் / மெட்ரிக் | சுயநிதி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 09 முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் வீட்டிலிருந்தே கற்றல் பணியினை தொடர வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .



 பெறுநர் : 

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் , விழுப்புரம் மாவட்டம் . 

நகல் :

 1 ) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் விழுப்புரம் | திண்டிவனம் / செஞ்சி / திருக்கோயிலூர் ( திருவெண்ணெய்நல்லூர் மற்றும் முகையூர் ஒன்றியம் மட்டும் ) உரிய தொடர் நடவடிக்கைக்காக 

2 ) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் , விழுப்புரம் மாவட்டம் . உரிய தொடர் 

3 ) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் , அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது 

4 ) சென்னை -6 பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது . 

5 ) சென்னை -6 , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது .