Ads

அறிவுநிலா | 4th Std Tamil - Term 3 | Lesson 9 - Book Back Question And Answers

அறிவுநிலா | 4th Std Tamil - Term 3 | Lesson 9 - Book Back Question And Answers

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “தினமும்” என்ற சொல்லின் பொருள்?

    நாள்தோறும்
    வேலைதோறும்
    மாதந் தோறும்
    வாரந்தோறும்

விடை : நாள்தோறும்

2. “பனிச்சறுக்கு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

    பனி + சறுக்கு
    பனிச் + சறுக்கு
    பன + சறுக்கு
    பன் + சறுக்கு

விடை : பனி + சறுக்கு

3. “வேட்டை + நாய்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

    வேட்ட நாய்
    வேட்நாய்
    வேட்டைநாய்
    வேட்டநாய்

விடை : வேட்டைநாய்
                                                          வினாக்களுக்கு விடையளிக்க.

1. ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?

ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் தம்பி

2. பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?

மூன்று புதிர்களை பெரியவர் போட்டார்.

3. புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?

புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி

4. பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?

பெரியவர் பசுவை புதிருக்கு சரியான பதிலை கூறிய தம்பிக்கே கொடுத்தார்.

5. கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?

கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு சிட்டுக்குருவி ஆகும்.

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?


 


1. குறைய     இழைத்த
2. மெல்லிய     முடியாத
3. முடியும்     மெதுவாக
4. விரைவாக     தடித்த
5. கொழுத்த     நிறைய
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ


                                           இணைந்து செய்வோம்

 
விளையாடலாம் வாங்க! தூண்டில் மீன் விளையாட்டு!

மீன் வடிவத்தில் அட்டைகளை வெட்டிக் கொண்டு அட்டையில் பின்வரும் சொற்களை எழுதிக் கொள்ள வேண்டும். அட்டையில் குண்டூசியைக் குத்தி, வகுப்பறையின் நடுவில் வட்டமிட்டு அதில் அட்டைகளை பரப்பி வைக்க வேண்டும். ஒரு குச்சியின் நுனியில் நூலின் ஒரு முனையைக் கட்ட வேண்டும். மறுநுனியில் காந்தத்தை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பெரியதொரு வட்டமிட்டு வட்டத்தில் ஓர் அம்புககுறி இட வேண்டும். வட்டத்தில் மாணவர்களை ஓடவிட வேண்டும். ஆசிரியர் ஊதலை ஊதியவுடன் மாணவர்கள் வட்டத்தில் நிற்க வேண்டும். அம்புககுறி இட்ட இடத்தில் எந்த மாணவர் நிற்கிறாரோ அவர், தூண்டில் மூலம் ஓர் அட்டையை எடுத்து, அதில் உள்ள சொல்லுக்குப் பன்மைச்சொல் கூற வேண்டும்.


முட்டை    முட்டைகள்
புதிர்         புதிர்கள்
வீடு           வீடுகள்
கோழி     கோழிகள்
நாய்          நாய்கள்
துணி        துணிகள்
குச்சி        குச்சிகள்
வண்டி     வண்டிகள்
பரிசு     பரிசுகள்
முயல்     முயல்கள்
குருவி     குருவிகள்

                                                             மொழியோடு விளையாடு

1. புகைவண்டி

    புகை
    வடி
    வண்டி
    கை
    கைவண்டி
    வகை

2. கதைப்பாட்டு

    கதை
    பாட்டு
    பாடு
    தை
    பாதை
    பாப்பா

3. பருத்தி ஆடைகள்

    பருத்தி
    கடை
    ஆடை
    படை
    ஆதி
    கரு

                                              அறிந்து கொள்வோம்

சொல்லுக்குள் சொல் கண்டுபிடி!
கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

1. சதம்
விடை : நூறு

2. நட்சத்திரம்

விடை : விண்மீன்

3. சித்திரம்

விடை : ஓவியம்
                                                                 செயல் திட்டம்

 
உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு, 20 விடுகதைகளை எழுதி வருக.

1. கிணற்றுக்குள் வெள்ளை முத்துக்கள் – அது என்ன?

விடை : பல்

2. ஒரு புட்டியில் இரண்டு தைலம் – அது என்ன?

விடை : முட்டை

3. ஓடோடும் சங்கிலி பள்ளத்தைப் பார்த்தால் பாய்தோடும் சங்கிலி – அது என்ன?

விடை : நீர்

4. ஒரு கிணற்றுக்குள் 32 திருடர்கள் – அது என்ன?

விடை : பற்கள்

5. கறுப்பு ரோட்டில் வெள்ளைக்காரன் உருளுகிறான் – அது என்ன?

விடை : தோசை

6. மின்னல் அடிக்கும் இடி இடிக்கும் ஆனால் மழை பெய்யாது – அது என்ன?

விடை : பட்டாசு

7. ஒரு கரண்டி மாவு ஊரெல்லாம் தோசை – அது என்ன?

விடை : நிலவு

8. அடித்தால் வலிக்கும் கடித்தால்  இனிக்கும் – அது என்ன?

விடை : கரும்பு

9. ஒரு இட்லிக்கு மூன்று பேர் சண்டை போடுகிறார்கள் – அது என்ன?

விடை : மின் விசிறி

10. இருட்டு அறைக்குள் ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் – அது என்ன?

விடை : விண்மீன்கள்

11. ஒரு வீட்டுக்கு இரு வாசல் – அது என்ன?

விடை : மூக்கு

12. கத்திபோல் பூ பூக்கும் காடாரம் போல் காய் காய்க்கும் – அது என்ன?

விடை : தடியங்காய்

13. கால் இருக்கும் நடக்க முடியாது கையிருக்கும் அசைக்க முடியாது – அது என்ன?

விடை : நாற்காலி

14. பச்சைபெட்டிக்கும் வெள்ளை முத்துக்கள் – அது என்ன?

விடை : வெண்டைக்காய்

15. பச்சை வீட்டிற்கு சிவப்பு வாசல் – அது என்ன?

விடை : கிளி

16. வானத்தில் பறக்கும ஆனால் சிறகுகள் கிடையாது – அது என்ன?

விடை : கொடி

17. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது – அது என்ன?

விடை : தண்ணீர்

18. வளைக்க முடியம் ஆனால் உடைக்க முடியாது – அது என்ன?

விடை : முடி

19. தன்னை கரைப்பான், சரித்திரம் படைப்பான் – அது என்ன?

விடை : சுண்ணாம்புக்கட்டி

20. மேலே போவான், கீழே வர மாட்டான் – அது என்ன?

விடை : வளர்ச்சி
                                                   கூடுதல் வினாக்கள்

 
1. பெரியவர் போட்ட மூன்று புதிர்கள் யாவை?

    மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?
    மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?
    அதிக விரைவாகச் செல்வது எது?

2. அண்ணனும் தம்பியும் புதிருக்கான விடை எதுவென்று கூறினர்?
புதிர்                                         அண்ணன்            தம்பி
வயிற்றை நிரப்புவது      அறுசுவை உணவு    பூமி
மகிழ்ச்சியைத் தருவது     பணம்                     தூக்கம்
விரைவாகச் செல்வது     வேட்டை நாய்     சிந்தனை ஓட்டம்

3. புதிருக்கான சரியான பதிலை தம்பிக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?

கவின்நிலா தன் தந்தைக்கு புதிருக்கான சரியான பதிலை சொல்லிக் கொடுத்தாள்