Ads

பண்படுத்தும் பழமொழிகள் | 4th Std Tamil - Term 1 | Lesson 5 - Book Back Question And Answers

பண்படுத்தும் பழமொழிகள் | 4th Std Tamil - Term 1 | Lesson 5 - Book Back Question And Answers

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?


Question 1.
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் …………………………
அ) கடைத்தெரு
ஆ) பக்கத்து ஊர்
இ) வாரச்சந்தை
ஈ) திருவிழா
Answer:
இ) வாரச்சந்தை

Question 2.
யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) யானை + கொரு
ஆ) யானை + ஒரு
இ) யானைக்கு + ஒரு
ஈ) யானைக் + கொரு
Answer:
இ) யானைக்கு + ஒரு

Question 3.
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பழம் + சாறு
ஆ) பழச் + சாறு
இ) பழ + ச்சாறு
ஈ) பழ + சாறு
Answer:
அ) பழம் + சாறு

Question 4.
நாய் …………….
அ) குரைக்கும்
ஆ) குறைக்கும்
இ) குலைக்கும்
ஈ) கொலைக்கும்
Answer:
அ) குரைக்கும்

Question 5.
ஆசி இச்சொல்லின் பொருள்
அ) புகழ்ந்து
ஆ) மகிழ்ந்து
இ) இகழ்ந்து
ஈ) வாழ்த்து
Answer:
ஈ) வாழ்த்து

Question 6.
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
அ) வாரம் + சந்தை = …………………….
ஆ) பழைமை + மொழி = …………………..
Answer:
அ) வாரம் + சந்தை = வாரச்சந்தை
ஆ) பழைமை + மொழி = பழமொழி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
Answer:
அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.

Question 2.
‘ஆநெய் ‘பூநெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
Answer:
ஆநெய் என்பது பசுவின் நெய்யினையும், பூநெய் என்பது பூவில் ஊறும் தேனையும் குறிக்கின்றன.

Question 3.
“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பதுதான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கொண்டு கற்க வேண்டும்.

பழமொழியை நிறைவு செய்க


Answer
 
படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க

Answer
   

முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்


 Answer

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
நாயகனாக இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………..
அ) நாயக+னாக
ஆ) நாயகன் + ஆக
இ) நாய் + கன்
ஈ) நாய + கனாக
Answer:
ஆ) நாயகன் + ஆக

Question 2.
கொண்டிருந்தது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) கொண்டு + இருந்தது
ஆ) கொண்டு + யிருந்தது
இ) கொண்டு + உருந்தது
ஈ) கொண்டி + ருந்தது
Answer:
அ) கொண்டு + இருந்தது

Question 3.
வயது + ஆன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) வயதென
ஆ) வயதுயென
இ) வயதான
ஈ) வயது ஆன
Answer:
இ) வயதான