Ads

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு!

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
 *மாநில மையம்* *நாள்:22.02.2024*
**********************
 *ஆசிரியர் இனத்திற்கு ஓர் பிரச்சினை என்றால் முதலில் உரிமைக்குரல் எழுப்புவது நாம் தான் எனதில் ஐயம் இல்லை.*

*சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை முன்னிறுத்தி சென்னையில் தனிப்பட்ட சங்க போராட்டம் நடைபெற்றுவருகிறது.*

*நம்மிடம் ஆதரவு கேட்டு கொண்டதனை மாநில உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.*

*போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என TNPTF மாநில மையம் அரசை கேட்டுக்கொள்கிறது.*
***********************

*ஆசிரியர்களை காவல்துறை அடக்குமுறை மூலம் கைது செய்து வருகிறது. காவல்துறை மென்மைப்போக்கை கடைபிடித்து அரசிடம் அழைத்துப் பேச வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.*

*இடைநிலை ஆசிரியர்களின் முற்றுகைப் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகள்.*💐💐
**********************

*உரிமைக்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நாம் எப்போதும் துணை நிற்போம்.*

*நாம் களம் காண வேண்டிய சூழல் வந்தாலும் களம் கண்டு அவர்களுக்கு துணை நிற்போம்.*
🔥🔥🔥

 *கூட்டுப் போராட்டங்களிலும், தனிச்சங்கப் போராட்டங்களிலும்,தன்னெழுச்சிப் போராட்டங்களிலும் முன்னணிப் படையாய், முன்களப் படையாய் விளங்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தோழர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்.*
**********************
 *போராட்ட வாழ்த்துக்களுடன்**
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்* 
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*