Ads

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவித்த அரசியல்கட்சிகள் மற்றும் தோழமை ஆசிரியர் சங்கங்கள் விவரம் !

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவித்த அரசியல்கட்சிகள் மற்றும் தோழமை ஆசிரியர் சங்கங்கள் விவரம் !

*நான்கு நாட்களாக 22.02.2024 தொடர்ந்து முற்றுகை போராட்டம் செய்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மூத்த சகோதர ஆசிரியர் இயக்கங்கள் ஆதரவு வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி.*



இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய முற்றுகைப் போராட்டம் சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல்துறையின் அடக்குமுறையையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி தினமும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைதாகியும் வருகிறோம். தமிழகம் முழுக்க தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் கிட்டதட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இதுவரை ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொடக்கக்கல்வித்துறையின் தோழமை சங்கங்களுக்கும் கோடான கோடி நன்றியை SSTA இயக்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் :


1) பாட்டாளி மக்கள் கட்சி (PMK)

2) அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (AMMK)

3) பாரதீய ஜனதா கட்சி (BJP)

தொடக்கக்கல்வித்துறை தோழமை சங்கங்கள் :


1) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திரு.ரெங்கராஜன்)

2) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி (திரு.செ.முத்துச்சாமி)

3) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ..(திரு.மயில்)

4) JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திரு. குன்வர் ஜோஸ்வா வளவன்)

5) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திரு.நீலகண்டன், பொருளாளர்)

6) தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திரு.காமராஜ்)