Ads

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை-10th Std -Tamil - Book Back Questions and Answers

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

“அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது” – ஐன்ஸ்டைன்.

“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்.

இவ்விருவரின் கூற்றுகளைப் பாடப்பகுதி உணர்த்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு உரையாடுக.

Answer:

மணி: அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரே. அதைப் பற்றிய காரணம் என்னவாக இருக்கும்?

முகில்: அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளந்து விடுகிறது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது.

மணி: ஐன்ஸ்டைனது E = MC2 கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் இதுவாக இருக்குமோ?

முகில்: ஆம்! ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவரது கோட்பாடுகளை அறிவுத்திறனுடன் கற்பனையையும் சேர்த்து யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டு கொண்டது.

மணி: ‘வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

முகில்: ஆம் ஹாக்கிங்கின் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.

மணி: எப்படி?

முகில்: 1963 ஆம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இவர் சில நாட்கள் மட்டுமே உயிரோடிருப்பார் என்றனர். ஆனால் மருத்துவ உலகமே மிரண்டு போகும்படி 53 ஆண்டுகள் இயங்கினார். 1985 இல் மூச்சுக்குழல் தடங்களால் பேசும் திறனை இழந்தார். எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே.

மணி: ஹாக்கிங்கின் உடல் நலக் குறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு யாது?

முகில்: ஹாக்கிங் அவருடைய கன்னத்து அசைவுகள் மூலம் தன் கருத்தை தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து தன் கோட்பாடுகளை விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு உலகம் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார். 1988ஆம் ஆண்டு இவர் இயற்றிய காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் ஒரு கோடி படிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.

மணி: கருந்துளைப் பெருவெடிப்பு ஆகியன பற்றிய அரிய உண்மைகள் அந்நூலில் உள்ளன. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.

முகில்: உண்மைதான். அவர்கூறியதத்துவத்திற்கு அவரேசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். இத்தகைய அறிஞர்களைப் பற்றிய செய்திகளை விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி!

Question 2.

கருந்துளைச் சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக் குறுங்கட்டுரையாக எழுதுக.

Answer:

முன்னுரை :

நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று விண்மீன்களின் ஆயுள் கால முடிவில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்மீன் சுருக்கம் :

ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. ஜான் வீலர் கருத்து கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் வெளியிட்டவர் ஜான்வீலர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் ஏன் ஒளியும் கூட ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற எதுவும் வெளிவர முடியாததனால் இதனைக் கருந்துளை என்றார் ஜான் வீலர்.

ஹாக்கிங் கதிர்வீச்சு :

சில நேரங்களில் உண்மை பொய்யையும் மிஞ்சுவதாக அமைகிறது. கருந்துளைப் பற்றிய உண்மைகளும் அப்படியே. ஹாக்கிங் மேற்கொண்ட கருந்துளை ஆராய்ச்சி முடிவு ஹாக்கிங் கதிர்வீச்சு’ என அழைக்கப்படுகிறது.

கருந்துளைக் கோட்பாடு :

கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர் வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்து விடும். இக்கோட்பாடுகளை ஹாக்கிங் கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டத

முடிவுரை :

அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங், கருந்துளைப் படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தார்.

நெடுவினா

Question 1.

“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ‘விண்வெளிப் பயணம்’ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

Answer:

அறிமுகவுரை:

இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.

பேரண்டம்:

பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். ‘இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்’ என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.

விண்மீன்கள்:

விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஹ ாக்கின், ‘நமது பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என்று விளக்கினார்.

கதிர்வீச்சும் துகளும்:

“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எப்படியெனில், கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கருத்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதை நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங், கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்துவிடும் என்றார்.

முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.

திரும்புதல்:

விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.

நிறைவுரை:

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு…………………..

அ) 1978

ஆ) 1988

இ) 1972

ஈ) 1982

Answer:

ஆ) 1988

Question 2.

பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்கள்…………………..

அ) 8

ஆ) 9

இ) 10

ஈ) 15

Answer:

இ) 10

Question 3.

தற்காலத்தின்…………………..என்று புகழப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

அ) விடிவெள்ளி

ஆ) நம்பிக்கை மனிதன்

இ) ஐன்ஸ்டைன்

ஈ) அரிஸ்டாட்டில்

Answer:

இ) ஐன்ஸ்டைன்

Question 4.

ஸ்டீபன் ஹாக்கிங் இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு வயது…………………..

அ) 1963, 21

ஆ) 1965, 23

இ) 1961, 19

ஈ) 1959, 17

Answer:

அ) 1963, 21

Question 5.

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..

அ) காலரா

ஆ) தொழு நோய்

இ) பக்கவாதம்

ஈ) காய்ச்ச ல்

Answer:

இ) பக்கவாதம்

Question 6.

ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்த ஆண்டு…………………..

அ) 1963

ஆ) 1983

இ) 1985

ஈ) 1973

Answer:

இ) 1985

Question 7.

பக்கவாதம் என்னும் நரம்பு நோய்ப் பாதிப்புடன் ஸ்டீபன் ஹாக்கிங் மேலும் இயங்கிய ஆண்டுகள்…………………..

அ) 23

இ) 43

ஆ) 21

ஈ) 53

Answer:

ஈ) 53

Question 8

இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை………………….. அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.

அ) புவியியல்

ஆ) கணிதவியல்

இ) புள்ளியியல்

ஈ) வானியல்

Answer:

ஆ) கணிதவியல்

Question 9.

இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங்…………………..

அ) ஏற்றுக் கொண்டார்

ஆ) ஆய்வுக்கு உட்பட்டது என்றார்

இ) மறுத்தார்

ஈ) உலகம் முழுவதும் பரப்பினார்

Answer:

இ) மறுத்தார்

Question 10.

பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்…………………..

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ) வேர்ட்ஸ்வொர்த்

இ) அரிஸ்டாட்டில்

ஈ) கார்ல் மார்க்ஸ்

Answer:

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 11.

கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர்…………………..

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ) ஜான் வீலர்

இ) வேர்டுஸ்மித்

ஈ) வாட்சன்

Answer:

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 12.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்…………………..

i) ஜன்ஸ்டைன்

ii) நியூட்ட ன்

iii) கிரிகோர் மெண்டல்

அ) i, ii – சரி

ஆ) ii, ii – சரி

இ) மூன்றும் சரி

ஈ) மூன்றும் தவறு

Answer:

அ) i, ii – சரி

Question 13.

நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்…………………..

அ) கொலம்பியா

ஆ) ஆக்ஸ்போர்டு

இ) கேம்பிரிட்ஜ்

ஈ) டிரான்ஸ்போர்டு

Answer:

இ) கேம்பிரிட்ஜ்

Question 14.

ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர்

அ) ஐன்ஸ்டைன்

ஆ) ஜான் வீலர்

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) சார்லஸ் டார்வின்

Answer:

அ) ஐன்ஸ்டைன்

Question 15.

ஐன்ஸ்டைன் காலத்தில் ………….. என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அ) E = mc2

ஆ) F = cm2

இ) E = cm2

ஈ) F = mc2

Answer:

அ) E = mc2

Question 16.

ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாகக் கூறியதை உலகம் ……………………  ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.

அ) 100

ஆ) 200

இ) 150

ஈ) 250

Answer:

அ) 1001

Question 17.

ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கிய கருந்துளைக் கோட்பாட்டை உலகம் எளிதில் புரிந்து கொள்ளக் காரணம்

அ) கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னதால்

ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்

இ) பருப்பொருள்களோடு ஒப்பிட்டுக் கூறியதால்

ஈ) பெருவெடிப்பைச் சான்று காட்டியதால்

Answer:

ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்

Question 18.

அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ) அன்னை தெரசா

இ) ஹெலன் ஹெல்லர்

ஈ) கிரிகோல் மெண்டல்

Answer:

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 19.

ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளைக் கண்டறிக.

i) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது

ii) உல்ஃப் விருது

iii) காப்ளி பதக்கம்

iv) அடிப்படை இயற்பியல் பரிசு

அ) i, ii – சரி

ஆ) i, ii, iii – சரி

இ) i, iv – சரி

ஈ) நான்கும் சரி

Answer:

ஈ) நான்கும் சரி

Question 20.

கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் …………………….

அ) நியூட்டன்

ஆ) ஹெலன் கெல்லர்

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) கிரிகோர் மெண்டல்

Answer:

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 21.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

அ) 30

ஆ) 40

இ) 50

ஈ) 70

Answer:

ஆ) 40

Question 22.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ வெளிவந்த ஆண்டு……………………..

அ) 1972

ஆ) 1976

இ) 1982

ஈ) 1988

Answer:

ஈ) 1988

Question 23.

பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையான நூல்…………

அ) காலத்தின் சுருக்கமான வரலாறு

ஆ) ஞாலத்தின் சுருக்கமான வரலாறு

இ) ஹாக்கிங்கின் தத்துவங்கள் ஈ) பெருவெடிப்பும் கருந்துளையும்

Answer:

அ) காலத்தின் சுருக்கமான வரலாறு

Question 24.

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) பரிபாடல்

Answer:

அ) அகநானூறு

Question 25.

“திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம்

அ) கரூர்

ஆ) பெரம்பலூர்

இ) தஞ்சாவூர்

ஈ) திருச்சி

Answer:

அ) கரூர்

Question 26.

………………. இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்.

அ) 2010

ஆ) 2005

இ) 2007

ஈ) 2012

Answer:

ஈ) 2012

Question 27.

ஸ்டீபன் ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள்

i) அடுத்த தலை முறை

ii) முந்தைய தலை முறை

iii) பெருவெடிப்புக் கோட்பாடு

iv) சிறுவெடிப்புக் கோட்பாடு

அ) i, ii – சரி

ஆ) i, iii – சரி

இ) iii, iv – சரி

ஈ) நான்கும் சரி

Answer:

ஆ) i, ii – சரி

Question 28.

ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது………….. ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அ) 40

ஆ) 50

இ) 60

ஈ) 70

Answer:

இ) 60

Question 29.

ஸ்டீபன் ஹாக்கிங் ………………. என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

அ) போயிங் 725

ஆ) போயிங் 726

இ) போயிங் 727

ஈ) போயிங் 729

Answer:

இ) போயிங் 727

Question 30.

அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை…………………………

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ) எடிசன்

இ) நியூட்டன்

ஈ) மேரி கியூரி

Answer:

அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 31.

தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்று கூறியவர் ……………

அ) அரிஸ்டாட்டில்

ஆ) பெர்னாட்ஷா

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) டெமாதனிஸ்

Answer:

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 32.

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்

அ) ஐன்ஸ்டைன்

ஆ) நியூட்டன்

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) எடிசன்

Answer:

அ) ஐன்ஸ்டைன்

Question 33.

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன் என்று கூறியவர் ………..

அ) ஐன்ஸ்டைன்

ஆ) நியூட்டன்

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

ஈ) எடிசன்

Answer:

இ) ஸ்டீபன் ஹாக்கிங்

கூடுதல் வினா

நெடுவினா

Question 1.

“விண்ணைத் தாண்டிய நம்பிக்கை” கதையினைச் சுருக்கி எழுதுக.

Answer:

முன்னுரை:

உண்மையைக் கண்டறியும் அறிவியல் கொள்கை போற்றுதலுக்குரியது ஆகும். தன்னால் எந்த இயக்கமும் செய்ய இயலாத நிலையிலும், அறிவியலின் உண்மைகளைச் சொன்ன ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரின் பாராட்டுக்குரிய செயல்களைக் காண்போம்.

தளராத நம்பிக்கை :

21ஆம் அகவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங். மருத்துவ உலகமே மிரண்டு போகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார். மூச்சுக்குழாய் தடங்களால் பேச்சை இழந்தார். பேசும் திறனை இழந்தபோதும் கன்னத்தசை அசைவு, கண் சிமிட்டல் மூலம் தன் கருத்துகளைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.

ஹாக்கிங் கதிர்வீச்சு:

பேரண்டப் பெருவெடிப்பினால் உருவானதே இந்தப் புனித பூமி ஆகும். ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஜான் வீலரின் கருந்துளைக் கோட்பாட்டை ஆராய்ச்சி செய்தார். கருந்துளையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் இறுதியில் வெடித்து மறையும். கருந்துளைக்குள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவர இயலாது. இந்த ஆராய்ச்சியின் முடிவே ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ எனப்படுகிறது.

சிறப்புகள்: அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ப் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

முடிவுரை:

“பூ ஒற்றைக் காலில் நிற்பதால் ஊனம் என்று கருதுவதில்லை ” அதுபோல, தன் உடல் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சாதனைப்பூவாகி அறிவியல் உலகில் திகழ்ந்த ஹாக்கிங்கே நமக்குத் தன்னம்பிக்கைப் பாடம் எனலாம்.