Ads

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் -10th Std Social Science- Book Back Question And Answer

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் -10th Std Social Science- Book Back Question And Answer 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

அ) வஹாபி கிளர்ச்சி

ஆ) ஃபராசி இயக்கம்

இ) பழங்குடியினர் எழுச்சி

ஈ) கோல் கிளர்ச்சி

விடை:

ஆ) ஃபராசி இயக்கம்

Question 2.

‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

அ) டிடு மீர்

ஆ) சித்து

இ) டுடு மியான்

ஈ) ஷரியத்துல்லா

விடை:

இ டுடு மியான்

Question 3.

நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?

அ) சாந்தலர்கள்

ஆ) டிடு மீர்

இ) முண்டா

ஈ) கோல்

விடை:

அ) சாந்தலர்கள்

Question 4.

கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

அ) தாதாபாய் நௌரோஜி

ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே

இ) பிபின் சந்திர பால்

ஈ) ரொமேஷ் சந்திரா

விடை:

இ பிபின் சந்திர பால்

Question 5.

வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?

அ) 1905 ஜூன் 19

ஆ) 1906 ஜூலை 18

இ) 1907 ஆகஸ்ட் 19

ஈ) 1905 அக்டோபர் 16

விடை::

1905 அக்டோபர் 16

Question 6.

சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

அ) கோல் கிளர்ச்சி

ஆ) இண்டிகோ கிளர்ச்சி

இ) முண்டா கிளர்ச்சி

ஈ) தக்காண கலவரங்கள்

விடை:

இ முண்டா கிளர்ச்சி

Question 7.

1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

அ) அன்னி பெசன்ட் அம்மையார்

ஆ) பிபின் சந்திர பால்

இ) லாலா லஜபதி ராய்

ஈ) திலகர்

விடை:

ஈ) திலகர்

Question 8.

நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

அ) தீன பந்து மித்ரா

ஆ) ரொமேஷ் சந்திர தத்

இ) தாதாபாய் நௌரோஜி

ஈ) பிர்சா முண்டா

விடை::

அ) தீன பந்து மித்ரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக .

Question 1.

மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

விடை::

வஹாபி

Question 2.

சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………

விடை:

கோல் கிளர்ச்சி

Question 3.

……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.

விடை:

சோட்டா நாக்பூர் குத்தகை

Question 4.

சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….

விடை:

1908

Question 5.

W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..

விடை:

1885

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.

(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.

(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.

(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.

(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை

இ) (iii) மற்றும் (iv) சரியானவை

ஈ) (i) மற்றும் (iv) சரியானவை

விடை:

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

Question 2.

(i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (

(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

அ) (i) மற்றும் (iii) சரியானவை

ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

இ) (ii) மற்றும் (iii) சரியானவை

ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை

விடை:

ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

Question 3.

கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடை:

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 4.

கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

விடை:

இ கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

விடை:

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.

ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

விடை:

மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்

சமய இயக்கங்கள்

சமூகக் கொள்ளை

மக்களின் கிளர்ச்சி

Question 2.

வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

விடை::

சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

Question 3.

வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

விடை:

இந்தியா பொருளாதார ரீதியாக அடிபணிந்து பிரிட்டிஷ் தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குபவராக மாற்றப்பட்டது.

அதேசமயம் இது ஆங்கில உற்பத்தியை கைவிடுவதற்கும் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலீட்டிற்கும் ஒரு சந்தையாக மாறியது.

எனவே காலனித்துவ பொருளாதாரம் இந்தியாவுக்கு எந்தவொரு சாதகமான வருமானமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வளங்களை மாற்றுவதாக இருந்தது.

இது ‘செல்வத்தின் வடிகால்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 4.

தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.

விடை:

அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.

தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராதநிலை வழங்கப்பட்டது.

அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

Question 5.

லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.

விடை:

லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதே ஏற்றுக்கொண்டது.

இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.

1857ஆம் ஆண்டின் கிளாச்சியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.

விடை:

காரணங்கள் : ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை :

உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக் கொள்கை:

சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது.

1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக் குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.

ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.

ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில்

ஊதியம் வழங்கப்பட்டது.

அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

உடனடிக்காரணம்:

புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.

பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டன.

சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.

மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.

Question 2.

1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?

விடை:

இந்து முஸ்லிம் பிரிவினை:

வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம்:

பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.

எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.

1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.

வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905-1911):

புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.

வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன.

மிதவாதப்போக்கு

ஆக்கப்பூர்வ சுதேசி

தீவிர தேசியவாதம்

புரட்சிகர தேசியவாதம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.

அ) 100

ஆ) 190

இ) 109

ஈ) 209

விடை:

ஆ) 190

Question 2.

……………… ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.

அ) 1857

ஆ) 1987

இ) 1587

ஈ) 1875

விடை:

அ) 1857

Question 3.

மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.

அ) அமெரிக்க

ஆ) ரஷ்ய

இ) ஐரோப்பி

ஈ) எதுவுமில்லை

விடை:

இ ஐரோப்பிய

Question 4.

1857ஆம் ஆண்டில் பிற்பகுதியில் …………….. ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது.

அ) சென்னை

ஆ) தில்லி

இ) மும்பை

ஈ) ஆந்த்ரா

விடை:

ஆ) தில்லி

Question 5.

இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் ………………. முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

அ) ஐந்து

ஆ) இரண்டு

இ) மூன்று |

ஈ) ஏழு

விடை:

ஆ) இரண்டு

Question 6.

பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.

அ) குறைந்த விலையில்

ஆ) அதிக விலையில்

இ) நடுத்தர விலையில்

ஈ) மிக அதிக விலையில்

விடை:

அ) குறைந்த விலையில்

Question 7.

இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….

அ) 1989

ஆ) 1859

இ) 1789

ஈ) 1895

விடை::

ஆ) 1859

Question 8.

அதிக அளவிலான வரி விதிப்பு ……………… பாதித்தது.

அ) வேளாண்மை

ஆ) மீன்பிடித்தல்

இ) சுரங்கத் தொழில்

ஈ) தொழிலகம்

விடை:

அ) வேளாண்மை

Question 9.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.

அ) உமேஷ் சந்திர பானர்ஜி

ஆ) A.O. ஹியூம்

இ) கர்சன் பிரபு

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) உமேஷ் சந்திர பானர்ஜி

Question 10.

……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.

அ) 1806

ஆ) 1906

இ) 1916

ஈ) 1866

விடை:

ஆ) 1906

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

பிளாசிப் போருக்கு வித்திட்டவர் ……………. ஆவார்.

விடை:

ராபர்ட் கிளைவ்

Question 2.

கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக ………….. விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர்.

விடை:

பெரும் எண்ணிக்கையில்

Question 3.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் …………….. பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை.

விடை:

தனிச்சொத்துரிமை

Question 4.

சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்ட லம் ………….. ஆகும்.

விடை:

சாந்தல் பர்கானா

Question 5.

கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு ………………. என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.

விடை:

குண்டக்கட்டி

Question 6.

தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ………………. தமது சேவைகளை வழங்கினார்.

விடை:

A.0. ஹியூம்

Question 7.

வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட ………………. வாழ்ந்த மக்களும் உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர்.

விடை::

கிராம சமூகத்தில்

Question 8.

1905ஆம் ஆண்டின் ………………. மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.

விடை:

வங்கப் பிரிவினை

Question 9.

1914ஆம் அண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை …………… ஆதரவைத் தந்தது.

விடை:

பிரிட்டிஷாருக்கு

Question 10.

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை ……………. ஏற்றது.

விடை:

காங்கிரஸ் தலைமை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.

கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது.

காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

விடை:

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

Question 2.

கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது.

காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

விடை:

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

விடை:

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.

சமய இயக்கங்கள் குறிப்பு வரைக.

விடை:

சமய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

Question 2.

சமூகக் கொள்கை குறிப்பு வரைக.

விடை:

இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.

ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டிற்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.

Question 3.

மேலாதிக்கக் கொள்கை குறிப்பு வரைக.

விடை:

ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.

உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

Question 4.

1857ம் ஆண்டின் பெருங்கலகத்தின் முக்கியத்துவம் யாது?

விடை:

இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.

இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.

Question 5.

இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல் பற்றி எழுதுக.

விடை:

1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.

Question 6.

பிரித்தாளும் கொள்கை வரையறு.

விடை:

இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆகிலேயர்கள் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.

Question 7.

வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போக்குகள் யாவை?

விடை:

மிதவாதப் போக்கு

ஆக்கபூர்வ சுதேசி

தீவிர தேசியவாதம்

புரட்சிகர தேசியவாதம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.

இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை எழுதுக.

விடை:

மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குகிறது.

சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது. – இராணுவச்செலவுகளைக் குறைப்பது.

உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.

நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.

ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.

காவல்துறை சீர்திருத்தங்கள்.

வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.

இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

Question 2.

இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய எழுச்சி மற்றும் பொருளாதாரத்தை பற்றி விவரிக்க.

விடை:

அ. தேசியத்தின் எழுச்சி:

19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.

எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.

ஆ. காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்:

காலனி ஆட்சி பற்றி பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.